// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** சினிமாவிலிருந்து இருந்து விலகும் நடிகை நயன்தாரா - ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமாவிலிருந்து இருந்து விலகும் நடிகை நயன்தாரா - ரசிகர்கள் அதிர்ச்சி

லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்..இதையடுத்து இருவரும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.




திரைத்துறையில் இருந்து விலகல் திருமணம் முடிந்த நிலையில் முதல் முறையாக இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது இருக்கும் படங்களை நடித்து கொடுத்துவிட்டு திரையுலகில் இருந்து விலக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




இதற்கு காரணம் தாலி சென்டிமென்ட் என்று கூறப்படுகிறது. நயன்தாராவின் குடும்பத்தினர் எந்த காரணத்திற்காகவும் தாலியை கழட்ட வேண்டாம் என்று கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்களில் கூட தாலியை கழட்டாமல் நடித்து வருகிறார்.




பல கதாபாத்திரங்களில் நடிக்கும் போது தாலியை கழட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினாலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிப்பார் எனவும் இதையடுத்து புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.   

Post a Comment

0 Comments