75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தேசியக்கொடி பறக்க விட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது..
இந்நிலையில் இன்று திருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகர் பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகள் வணிக வளாகங்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டது...
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில், பொருளாளர் தங்கராஜ் உட்பட தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
0 Comments