NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** "நாளும் ஒரு நற்சிந்தனை" நூல் வெளியீட்டு விழா

"நாளும் ஒரு நற்சிந்தனை" நூல் வெளியீட்டு விழா

சென்னை எழும்பூர் காந்தி இரவின் ரோட்டில் உள்ள  ரமடா ஹோட்டலில் மாண்புமிகு நீதியரசர் எம் கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல் வெளியீட்டு விழாவும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.... 


நூலை நீதியரசர் டி ராஜா அவர்கள் வெளியிட மாண்புமிகு நீதியரசர் எஸ் விமலா பெற்றுக்கொண்டார்...



இவ்விழாவில்  நீதியரசர் கே வெங்கட்ராமன், நீதியரசர் ஏடி ஜெகதீஷ் சந்திரா, நீதியரசர் சுந்தர் மோகன்,  நீதியரசர் பாஸ்கரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்...


நீதியரசர்  கற்பக விநாயகம் அவர்கள் தனிமனித ஒழுக்கம் நீதி நேர்மையுடன் வாழ வேண்டும் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்..


இந்த விழாவில் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக நிறுவனர்  ஜெயராமன் தலைமை தாங்கினார்..

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மணிவண்ணன் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக தமிழ் மாநில தலைவர் சின்ராஜ் தமிழ் மாநில செயலாளர் எஸ் கருப்பண்ணன் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரராஜா தமிழ் மாநில அமைப்பாளர் ஏ ராஜன் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக பொதுக்குழு ஆர்.கே ராஜா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments