ஜோய் ஆலுக்காஸ் சார்பில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சை.சற்குணன், விஎஸ் பிராப்பர்ட்டிஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ் லட்சியம் வெல்லும் மாத இதழின் ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியப் பெருமக்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்ச்சியை ஆனந்தி ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோய் ஆலுக்காஸ் மேலாளர் நிஷித்லால், துணை மேலாளர் நிகில்லால் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் அத்தர் ஜபீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அஸ்விதா அட்வர்டைசிங் ஹரிஹரன் ஒருங்கிணைத்தார். பலகுரல் மன்னன் ஐ காட் தமிழரசு கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் சென்றார்.
0 Comments