// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அறிவிப்பு

மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அறிவிப்பு

 வரும் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்ககத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அறிவித்துள்ளார்.. வரும் 11 ஆம் தேதி மாலை  திருச்சி மாநகரம், சமயபுரம், லால்குடி,துறையூர், திருவெறும்பூர், NO.1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது.. திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியிலிருந்து காந்தி மார்கெட் வரை நடைபெறும் மனித சங்கிலியில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள்  பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.


இதில் திருச்சி கிழக்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர்  முகமது ராஜா  தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments