வரும் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்ககத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அறிவித்துள்ளார்.. வரும் 11 ஆம் தேதி மாலை திருச்சி மாநகரம், சமயபுரம், லால்குடி,துறையூர், திருவெறும்பூர், NO.1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது.. திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியிலிருந்து காந்தி மார்கெட் வரை நடைபெறும் மனித சங்கிலியில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் திருச்சி கிழக்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தெரிவித்துள்ளார்
0 Comments