திருச்சி சரக காவலர் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆபாச படங்களை வெளியிட்ட டிஎஸ்பி பணியிடமாற்றம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் டிஜிபி உத்தரவு. திருச்சி சரக சார்பாக காவலர்களுக்கு என்று தனி whatsapp குரூப் செயல்பட்டு வருகிறது.
இதில் காவல்துறை தொடர்பான செய்திகள் படங்கள் பரிமாறப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அந்த குழுவில் பெண் ஆய்வாளர் ஒருவருடன், ஆபாசமாக இருந்த புகைப்படத்தை ஜீயபுரம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பரவாசுதேவன் என்பவர் நிர்வாண படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதைக் கண்ட காவலர்கள் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த குழுவில் இணைந்திருக்கும் பெண் காவலர்கள் பலரும் டிஜிபிக்கு புகார்களை அனுப்பினர்.இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து இது குறித்த விசாரணை அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள பரவாசுதேவன் ஜீயபுரம் DSP ஆக பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவரால் இவர் பாராட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் ஜீயபுரம் DSP ஆக கூடுதல் பொறுப்பேற்கிறார்.
0 Comments