BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** ஶ்ரீராம் பஜன் மண்டலி சார்பில் பஜனை கூட்டம்

ஶ்ரீராம் பஜன் மண்டலி சார்பில் பஜனை கூட்டம்

திருச்சி, ஸ்ரீராம் பஜன் மண்டலியின் சார்பாக மாதம் ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் பஜனை நடைபெறுகிறது. ஆகவே, அக்டோபர் மாத பஜனை 13.10.2022 அன்று நடைபெற்றது. அந்த சமயத்தில் வீட்டு வேலை செய்து, வரும்  வருமானத்தில் குடும்பம் நடத்தும் பெண் மணி வள்ளியின் மகள் யோகலக்ஷ்மிக்கு 30.10.2022 அன்று மணக்கால், நங்கையரம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 




அந்த மணப்பெண் யோகலக்ஷ்மிக்கு ஸ்ரீராம் பஜன் மண்டலியின் தலைவர் எஸ். விஸ்வநாதன், துணைத் தலைவர் ராஜாமணி, பொதுச் செயலாளர் முனைவர் ஆர். சுந்தரராமன், உதவிச் செயலாளர் ஆநந்தராவ் ஆகியோர் பாகவதர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் 4 கிராம் எடையுள்ள திருமாங்கல்யம், குண்டுகள் மற்றும் பொட்டைக் கொடுத்தனர்.  ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்து அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது

நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments