கோவை காரில் சிலிண்டர் எரிந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியளிக்கிறது என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி தெரிவித்துள்ளார்...
இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. உறக்கத்தை தொலைத்து,ஓய்வை துறந்து இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தாயுள்ள நிர்வாகத்தில் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.
மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி மீது மாசு கற்பிக்கும் முயற்சியை ஆளுநர் அவர்கள் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நடப்பது நமக்கான ஆட்சி..நம்பகமான ஆட்சி..நல்லாட்சி என்பதை புரிந்து கொண்டு சில ஷைத்தான்களின் மூளை சலவைக்கு புத்தியை பலி கொடுத்த மிகச் சொற்பமான இஸ்லாமிய இளைஞர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் திருந்தி கொள்ள வேண்டும்.
தீவிரவாதப் போக்கு ஒருபோதும் தீர்வாகாது. ஸ்டாலினின் தியாக நல்லாட்சி, ராகுல்காந்தியின் தேசபக்த யாத்திரை, மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறனற்ற செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் மனதில் இருந்து நீக்கி விட்டு பாஜக வளர்வதற்கு மட்டுமே இத்தகைய தீவிரவாத செயல்கள் நீரூற்றும் என்பதை பைத்தியகார சிந்தனை கொண்ட அந்த சொற்ப இஸ்லாமிய இளைஞர்கள் உணர்ந்து கொள்வது நலம்.
இந்த விவகாரத்தில் உடனடியாக குரல் கொடுத்த ஜவாஹிருல்லா, கே.எஸ். அழகிரி, தொல் திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி. இந்த தருணத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு துணை நிற்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி தெரிவித்துள்ளார்.
0 Comments