தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் 2022 மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி தென்னூர் தனியார் ஹோட்டலில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது .
தமுமுக மாநில செயலாளர் தலைமை தேர்தல் அதிகாரி மைதீன் செக்கான் தலைமை தேர்தல் நடத்தினார்.
உபா சட்டம் மற்றும் என்.ஐ.ஏ மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. எனவே என்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டும், உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அதே தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாகவும் போட்டி அரசு போல நடத்தும் ஆளுநரை கண்டித்தும், ஆளுநர் பொறுப்பை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ரெட் கிராஸ் போன்ற அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது என கூறும் கருத்து தவறு. மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு. பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடும் அமைப்பு அதை ரெட் கிராஸ் போன்ற அமைப்போடு ஒப்பீட முடியாது.
தமிழ்நாடு அரசை விமர்சித்த வேறு எந்த காரணங்களும் இல்லாததால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குறை கூறி வருகிறார் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
0 Comments