NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** சபரிமலை அன்னதானத்துக்கு 30 டன் மளிகைப் பொருள் ஜயப்ப சேவா சங்கம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது

சபரிமலை அன்னதானத்துக்கு 30 டன் மளிகைப் பொருள் ஜயப்ப சேவா சங்கம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியிலிருந்து 30 டன் மளிகைப் பொருள்கள் 4 லாரிகளில்  அனுப்பப்பட்டன திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியிலிருந்து 30 டன் மளிகைப் பொருள்கள் 4 லாரிகளில் செவ்வாய்க்கிழமை காலை அனுப்பப்பட்டன


சபரிமலையில் மண்டல பூஜை, மகர விழா காலங்களில் காா்த்திகை 1 முதல் 70 நாள்கள் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் அன்னதானம் நடைபெறுகிறது. அப்போது திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் டிச. 15 முதல் 20 ஆம் தேதி வரை ஐயப்பன் சன்னிதானத்திலும், 31 ஆம் தேதி பம்பைநதி அருகிலும் என 7 நாள்கள் அன்னதானம் அளிப்பது கடந்த 25 ஆண்டுகளாக நடைபெறுகிறது. நிகழாண்டில் அன்னதானம் செய்ய அன்னதான கமிட்டி மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீரங்கத்திலிருந்து 40 போ 30 டன் மளிகை பொருள்களுடன் 4 லாரிகளில் புறப்பட்டுச் சென்றனா்.


சேவா சங்கப் புரவலா் என்.வி. முரளி 4 லாரிகளையும் அனுப்பிவைத்தாா். நிகழ்ச்சியில் தொழிலதிபா் கே.ஆா்.டி. வெங்கடேசன், கெளரவத் தலைவா் சபரிதாசன், மாவட்டச் செயலா் ஸ்ரீதா், பொருளாளா் சுரேஷ், செயல் தலைவா் கிருஷ்ணன், அலுவலகச் செயலா் அம்சராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


Post a Comment

0 Comments