தமிழக அரசு துறை சார்பில் திருச்சியில் நடைபெற்று வரும் பணிகளுக்கு வெளி மாநில மாவட்ட வண்டிகளை தவிர்த்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜேசிபி வண்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை
முக்கிய நிறுவனங்களிடம் நேரடியாக பேசி குறைந்த விலையில் கஷ்டப்படும் சங்க உறுப்பினர்களுக்கு வண்டிகளை வாங்கித் தருவது உள்ளிட்ட இன்னும் ஏராளமான சேவைகளை நல சங்க உறுப்பினர்களுக்காக செய்ய உள்ளோம்.
அதேபோல் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த கோரிக்கை திருச்சி மாவட்டத்தில் தற்போது எல்என்டி பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளுக்காக வெளி மாநில வெளி மாவட்ட வண்டிகளை அழைத்து வந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் திருச்சி மாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு வண்டியை இயக்க நாங்கள் 1300 விலை நிர்ணயித்துள்ளோம் ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வண்டிகள் 900 850 என குறைத்து பணம் வாங்கிக் கொள்வதால், எங்கள் தொழில் பாதிப்படைந்து மிகவும் கஷ்டமடைந்து வருகிறோம் எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு தீர்வு காண கோரி கோரிக்கை வைத்தனர்.
0 Comments