தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பொது விநியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
இதில் CITU சங்கத்தின் தலைவர் ரங்கராஜன் மற்றும் இணைக்கப்பட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.. ராசப்பன் மாநில செயலாளர் / மண்டல செயலாளர் ஆகியோர் இருந்தனர்...இந்த ஆர்ப்பாட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமனம் செய்வதை வாபஸ் வாங்க கோரியும், தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திட கோரியும், அமுதம் ரேஷன் கடை கூட்டுறவுத்துறை மகளிர் சுய உதவிக் குழுக்கு வழங்கும் நடவடிக்கைகள் கண்டித்து, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கோரிக்கையாக வைக்கப்பட்டது
0 Comments