திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியும் தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து முப்பெரும்விழா நடைபெற்றது.. பாரதியார் பிறந்த நாளையொட்டி தேசிய மொழிகளின் தினத்தையும், இராமலிங்க வள்ளலாரின் 200 ஆவது ஆண்டு ஜெயந்தியையும், இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த அமுதப்பெருவிழாவையும் சேர்த்து முப்பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி “இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு” என்னும் பொருண்மையில் ஒருநாள் தேசியக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேசியக்கல்லூரியின் பத்மவிபூஷண் Dr.வி.கிருஷ்ணமூர்த்தி அரங்கத்தில் இக்கருத்தரங்கம்
காலை 9.30 மணிக்குத் திருவிளக்கு ஏற்றி, பாரத தாய், பாரதியார், வள்ளலார்
திருவுருவப்படங்களுக்கு மலர் தூவித் தொழுது தொடங்கப்பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வந்தோரைக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் வரவேற்றார்.
அப்பொழுது பாரத தேசத்திற்கும் சமூகத்திற்கும் தேசியக்கல்லூரி ஆற்றிய அரும்பணிகளை
எடுத்துரைத்தார். தேசியக்கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் Dr. என்.எஸ். பிரசாத் தம் தலைமையுரையில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் கல்வி நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவுபடுத்தினார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருமிகு இரா. மாது, பாரதியாரின் ஒருமைப்பாட்டு உணர்வு. வள்ளலாரின் ஜீவகாருண்ய சிந்தனை, தேசியக் கல்லூரியின் நாட்டுப்பற்று வரலாறு ஆகியவற்றைத் தம் நோக்கவுரையில் எடுத்துரைத்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் முனைவர் வெ. மாணிக்கவாசகம் தம் வாழ்த்துரையில் தேசியக்கல்லூரியின் பணிகளையும் தேசிய சிந்தனைக் கழகத்தின் 'காண்டீபம்' இணைய இதழின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்
இத்தொடக்க விழாவிற்குத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்
வி. திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தம் உரையில்
விடுதலைப்போராட்ட வரலாற்றில் மொழி. இலக்கியங்கள் ஆற்றிய சீரிய பணிகளை
எடுத்துரைத்தார். இன்று மக்களுக்குத் தேவையான வரலாற்று அறிவையும்
விழுமியங்களையும் இதுபோன்ற கருத்தரங்கங்களே தரவல்லன எனவும் கூறினார்.
வாழ்வியல்
தொடக்கவிழாவின் நிறைவாக. இந்த முப்பெரு விழாவிற்கும் தேசியக்கல்லூரிக்குமான
தொடர்பை, இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே செயின் ஜார்ஜ் கோட்டையில்
தேசியக்கொடி ஏற்றிய ஆர்யா (எ) பாஷ்யமும், வள்ளலார் புகழை உலகிற்குப் பரப்பிய ஊரன்
அடிகளும் தேசியக்கல்லூரியின் மேனாள் மாணவர்கள் என்றும், பாரதியாரைச் சுதேசமித்திரன்ம.கோபாலகிருஷ்ணய்யர் இக்கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவர் என்றும், இன்றைய
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் தம் நன்றியுரையில் கூறினார்
.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வில் காசர்கோடு
கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என். அஜித்குமார், 'இந்திய விடுதலைப்
போராட்டத்தில் மலையாள மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு இரண்டில்
கர்நாடகா அரசு முதல்நிலைக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அஜகலாகிரீஷ் பட், 'இந்திய
விடுதலைப் போராட்டத்தில் கன்னட மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு
மூன்றில் ஆந்திராவின் இந்து கல்லூரிக் கமிட்டி, துணைத்தலைவர் முனைவர் சிங்கம் வெங்கட்
லெட்சுமிநாராயணா, 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தெலுங்கு மொழியின் பங்களிப்பு' என்னும்
பொருண்மையிலும், நான்காம் அமர்வில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் டாக்டர் திருமதி சுதாசேஷய்யன், 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்
மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும்
விடுதலை வேள்வியில் தென்னிந்திய மொழிகளின் இலக்கிய ஆளுமைகள், நாட்டுப்பற்றையும்
சுதந்திர உணர்ச்சியையும் தத்தம் படைப்புகளில் எவ்வாறு மிளிரச் செய்துள்ளனர் என்பதை
விரிவாக எடுத்துரைத்தனர். இவ் அமர்வுகளுக்குக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள்
துணைவேந்தர் முனைவர் என். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆய்வுகளின் மீதான தம்
மதிப்புரையைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வில் காசர்கோடு
கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என். அஜித்குமார், 'இந்திய விடுதலைப்
போராட்டத்தில் மலையாள மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு இரண்டில்
கர்நாடகா அரசு முதல்நிலைக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அஜகலாகிரீஷ் பட், 'இந்திய
விடுதலைப் போராட்டத்தில் கன்னட மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு
மூன்றில் ஆந்திராவின் இந்து கல்லூரிக் கமிட்டி, துணைத்தலைவர் முனைவர் சிங்கம் வெங்கட்
லெட்சுமிநாராயணா, 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தெலுங்கு மொழியின் பங்களிப்பு' என்னும்
பொருண்மையிலும், நான்காம் அமர்வில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் டாக்டர் திருமதி சுதாசேஷய்யன், 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்
மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும்
விடுதலை வேள்வியில் தென்னிந்திய மொழிகளின் இலக்கிய ஆளுமைகள், நாட்டுப்பற்றையும்
சுதந்திர உணர்ச்சியையும் தத்தம் படைப்புகளில் எவ்வாறு மிளிரச் செய்துள்ளனர் என்பதை
விரிவாக எடுத்துரைத்தனர். இவ் அமர்வுகளுக்குக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள்
துணைவேந்தர் முனைவர் என். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆய்வுகளின் மீதான தம்
மதிப்புரையைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.இக்கருத்தரங்கின் நிறைவு விழா மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்விற்குத் தேசியக்கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் Dr. என்.எஸ். பிரசாத் தலைமை
தாங்கினார். தேசிய சிந்தனைக் கழகத்தின் துணைத்தலைவர் திரு. என். சிவானந்தமும்
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் எம். செல்வமும்
வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொண்டார். அவர் தம் உரையில், இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு பரந்துபட்ட
ஒன்று. இன்று எழுத்தாவணமாகக் கிடைப்பவை மட்டுமே முழுமையான வரலாறு அல்ல, இன்னும்
பதிவு செய்யப்படாத பல தியாகிகளின் வரலாறுகள் பாரத தேசம் முழுவதும் உள்ளன. அவற்றைத்
தொகுக்க வேண்டிய பொறுப்பு ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும்
நாட்டின் உண்மையான குடிமக்களுக்கும் உண்டு என்று கூறினார். நூற்றாண்டு கண்ட
தேசியக்கல்லூரியில் இத்தகைய சிறப்பான கருத்தரங்கம் நிகழ்ந்தமை குறித்துத் தம்
பெருமிதத்தையும் பாராட்டையும் தெரிவித்தார். முன்னதாகக் கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார்
வரவேற்புரை நல்க, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் க. புவனேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.
நிருபர் ரூபன்
0 Comments