தஞ்சை மண்டலத்தில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது..இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 84 கல்லூரிகள் பங்கு பெற்றன .
மூன்று சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி கிரிக்கெட் அணியானது 3 சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் பரிசைப் பெற்று பாரதிதாசன் பல்கலைக்கழக சாம்பியன் பட்டம் பெற்றது. திருச்சி தூய வளனார் கல்லூரி இரண்டாம் இடத்தையும், திருவாரூர் திரு வி.க அரசுகல்லூரி மூன்றாம் பரிசையும்பெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி கிரிக்கெட் அணியினரைக்
கல்லூரிச் செயலர் திருமிகு கா .ரகுநாதன் அவர்களும், தேசியக் கல்லூரியின்துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறைத் தலைவர் முனைவர்பிரசன்ன பாலாஜி அவர்களும் வாழ்த்தினர். விளையாட்டுத் துறையில்பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் தேசியக் கல்லூரிதன்வரலாற்றுப் பட்டியலில் மேலும் ஒரு சாதனையாக சாம்பியன்பட்டத்தைவென்றுள்ளது.
நிருபர் ரூபன்
0 Comments