திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூரில் உள்ள பழமை வாய்ந்த அனார் பாக் தர்கா மற்றும் இஸ்லாமிய அடக்கஸ்தலத்தை கடந்த ஜனவரி 1 அன்று அத்துமீறி இடித்ததை எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் தலைமையில் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தர்கா நிர்வாக குழு மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு குழுவினரிடம் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் ஹஸ்ஸான் பைஜி, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே முபாரக் அலி,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அனார் பாக் தர்கா கமிட்டி உறுப்பினருமான தளபதி.அப்பாஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 Comments