// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் முயற்சிகளுக்கு SDPI கட்சி வரவேற்பு

போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் முயற்சிகளுக்கு SDPI கட்சி வரவேற்பு

திருச்சி மத்திய மண்டல ஐஜி  மரியாதைக்குரிய கார்த்திகேயன் அவர்களுடைய  போதைப் ஒழிப்பு மற்றும்  போதை  பொருள்களுக்கு எதிரான அறிவிப்பு வரவேற்கத்தக்கது ! 


 இது குறித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்..போதைப் பழக்கத்தின் மூலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும்  சமூகத்தில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கு பின்னணியிலும்   இத்தகைய   போதை  பழக்கவழக்கங்கள்  பிரதான பங்கு வகிக்கின்றன,  குறிப்பாக இளைய தலைமுறையினரை  பாதுகாப்பது  நமது தலையான கடமை,  அரசோடும்  சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தம் காவல் துறையோடும்  போதை ஒழிப்பு  நடவடிக்கை  ஆதரவளிப்பது,  தமிழ் சமூகத்தின்  அக்கறையுள்ள ஒவ்வொருவர் மீதும்  பொறுப்பாகும்.



 என்றென்றும் SDPI கட்சி  போதைப் பொருட்களுக்கு எதிராக  களமாடும் என  உறுதி அளித்தார்..

Post a Comment

0 Comments