NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு விழா... திருச்சியில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் மற்றும் கொடியேற்றும் நிகழ்வு

மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு விழா... திருச்சியில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் மற்றும் கொடியேற்றும் நிகழ்வு

மனிதநேய மக்கள் கட்சியின் 15ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட உள்ளது இதனை முன்னிட்டு  மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு விழா பிப்ரவரி 07 செவ்வாய் கிழமை கொண்டாடப்படவுள்ளது..திருச்சி மேற்கு மாவட்டத்தின் சார்பில் திருச்சி மாநகரில் 15 இடங்களில் புதிய கொடிகளை ஏற்றும் நிகழ்ச்சியும்,


மாலை மணப்பாறை நகரத்தில் பல்வேறு இடங்களில் கொடிகளை ஏற்றி வைத்தும், அரசு தலைமை மருத்துவமனையில் நலத்திட்டங்களையும், மரக்கன்றுகளை பள்ளி கல்லூரி வளாகங்களில் நடுவது, ஆதரவற்ற முதியோர் காப்பகங்களில் உணவு வழங்குவது என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமை தாங்குகிறார். மாநில துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்களை கொடிகளை ஏற்றி வைத்து நலத்திட்டங்களை வழங்குகிறார்.


தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ. அப்துல் சமது, அசாரூதீன், அகமதுல்லாஹ், அப்துர் ரஹ்மான், ஹுமாயூன் கபீர், எஸ். அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Post a Comment

0 Comments