ஆம் ஆத்மி கட்சி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து மேக் இந்தியா நம்பர் ஒன் என்ற புரட்சி நடை பயணம் துவங்கியது.
திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை 500 கிலோ மீட்டர் நடை பயணம் 15 நாட்கள் மேற்கொள்ளப்பட உள்ளது..நிகழ்ச்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா நடை பயணத்தை வழி நடத்திச் செல்கிறார்.
இந்த நடை பயணத்தின் போது அரசு பள்ளிகளை மேம்படுத்தி, குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு முறைப்படி யான பயிற்சி அளித்து, கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் வேண்டும்
மத்திய அரசின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.என்பன போன்ற பண்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது..
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்க கெஜ்ரிவால் முழக்கமான, உலக அரங்கில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்றும் மேக் இந்தியா நம்பர் ஒன் நடைபயணம் துவங்கி உள்ளது
மக்களுக்கான சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வு, முரண்பாடான வரிவிதிப்பு முறைகளில் மக்கள் வதைக்கப்படுவதால், மிகுந்த சிரமப்படுகின்றனர். மேக் இந்தியா நெம்பர் என்ற கொள்கையை முன்வைத்து, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2024ம் ஆண்டு மேக் இந்தியா நெம்பர் ஒன் என்ற சூழ்நிலையை உருவாக்க தயாராகி வருகிறோம். அதன் அடிப்படையில் இந்த நடை பயணம் துவங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில், ராகுல் நடை பயணம் மேற்கொள்வது அவர் செய்த தவறுக்கான பிராயசித்தமாக செய்கிறார். நாங்கள் 75 ஆண்டு கால பின்னடைவை மாற்றுவதற்காக நடை பயணம் மேற்கொள்கிறோம். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியால் நாட்டில் மாற்றங்களை கொண்டு வர முடியாது.ஆம் ஆத்மி கட்சியால் அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் வரும் தேர்தலில் மோடியா கெஜ்ரிவாலா என்ற நிலை ஏற்படும். அதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை தயார் படுத்தி வருகிறோம்இவ்வாறு அவர் தெரிவித்தார்
0 Comments