BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் பகுதி கூட்டம்

திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் பகுதி கூட்டம்

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் பகுதி கலந்தாய்வு கூட்டம்  திருச்சி பால்பண்ணையில் இருந்து திருச்சி துவாக்குடி வரை உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களும் கலந்து கொண்ட பகுதி கூட்டம் திருவரம்பூர் மலைக்கோயில் பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் மற்றும் மக்கள் தொடர்பு செய்தியாளர் முன்னிலையில் திருவெறும்பூர் பகுதி மூத்த உறுப்பினர்கள் தலைமையில் சங்கத்தின் எர்த் மூவர்ஸ் வாடகை நிர்ணயித்து அதன் விலைப்பட்டியல்  வெளியிடப்பட்டது.




இந்த கலந்தாய்வு கூட்டத்தின் வாயிலாக அனைத்து கட்டிட வல்லுனர்களும் மற்றும் ஒப்பந்தக்காரர்களும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களுக்கு சங்கம் நிர்ணயித்த வாடகையை தந்து தங்களின் வாழ்வாதாரத்தை காக்குமாறு சங்கத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments