NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.


திருச்சி பீமநகர் கல்கி மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார் கோவை அய்யூப் சிறப்புரை ஆற்றினார் கல்லூரி முதல்வர் ரமீஷா அப்பாஸ் அலி, மாநிலத் துணைத் தலைவர் ரபியுதீன், மாநில பொருளாளர் பக்ருதீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா, மாவட்ட செயலாளர் ஷேக் மொகிதீன், பொருளாளர் சாகின், வேலூர் நிர்வாகி பிலால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பயின்ற 40 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது






இந்த நிகழ்ச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments