NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்

ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்

 திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் எலும்பு மூட்டு சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர்.ரா.ஹரீஷ்குமார் அவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு, விபத்தில் சிக்கிய நபர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை மற்றும் அவர்களை கையாளும் விதம் பற்றிய சிறப்பு பயிற்சியினை அளித்தார். சுமார் 20 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ரோஸ்கார்டன் பாரமெடிக்கல் பயிற்சி கல்வி நிறுவனம் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கும் அவசர கால உதவியாளர்களுக்கும் விபத்து நேரத்தில் உயிரைக்காப்பாற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சிகிச்சை உதவிகள் பற்றிய ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. 



இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments