NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** உலக கல்லீரல் தினம் - அப்போலோ மருத்துவ மனை சார்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி

உலக கல்லீரல் தினம் - அப்போலோ மருத்துவ மனை சார்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி

ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் கல்லீரல் ஆரோக்கியத்தை காப்பது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. 


இந்த விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவமனை டீன் நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமை தாங்கினார். அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் மருத்துவர் டாக்டர் குமரகுருபன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய் கணேசன் வயிறுக்குடல் கல்லீரல் மருத்துவர்கள் முரளி ரங்கன் செந்தூரன் மற்றும் மூத்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சுரேஷ் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த விழிப்புணர்வு பேரணியானது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா வழியாக சென்று கோர்ட், கண்டோன்மெண்ட் காவல் நிலையம் வழியாக மீண்டும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சென்றடைந்தது இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மருத்துவ பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்லீரல் பாதிப்பு குறித்த விழிப்புணர் பதிவுகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

Post a Comment

0 Comments