BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** சிறைவாசிகள் விடுதலை கோரி மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் தமஜக தலைவர் சரீப் ஆலோசனை

சிறைவாசிகள் விடுதலை கோரி மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் தமஜக தலைவர் சரீப் ஆலோசனை

 தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமஜக தலைவர் கே.எம் சரிப் தலைமையில் திருச்சி‌ பாலக்கரையில் உள்ள  தமஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. 

வருகின்ற 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்டத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது...


 இந்த கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவர் கதிரவன் அவர்களும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குழந்தை அரசன் அவர்களும் தமிழர் விடியல் கட்சியினுடைய தலைவர் இளமாறன் அவர்களும் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினுடைய மாநில தலைவர் எஸ் ஆர் பாண்டியன் அவர்களும் ஆத்தி மா மு க தலைவர் பசும்பொன் பாண்டியன் அவர்களும் ஏ ஐ டி யு சி யின் மாநில தலைவர் பி எல் ராமச்சந்திரன் அவர்களும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர் அவர்களும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய தலைவர் கே எம் கே ஹபீபுர் ரஹ்மான் அவர்களும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு துணைத் தலைவர் இமாம்  ஹஸ்ஸான் பைஜி அவர்களும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய  துணை தலைவர் உதுமான் அலி அவர்களும் சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் கென்னடி அவர்களும் சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் கமர்தீன் அவர்களும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சண்முகராஜா அவர்களும் துணை பொது செயலாளர் சஃபி அகமது அவர்களும் துணைத் தலைவர் துணைத் தலைவர் வழக்கறிஞர் அன்சர் மில்லத் அவர்களும் இணையதள பொறுப்பாளர் சரிப்ராசிக் அவர்களும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்...




இந்த பொதுக்கூட்டம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட தமஜக  தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராயல்சித்திக் தலைமையில் நடைபெற்றது..




சிறப்பு அழைப்பாளராக தமஜக மாநில தலைவர் கே.எம்.சரிப் கலந்து கொண்டு பொதுக்கூட்டம் நிகழ்வுகள் சம்பந்தமான முக்கிய ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்..




நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் துணை பொதுச்செயலாளர் சண்முகராஜா மாநில செயலாளர் ரியாஸ் மாநில துணை செயலாளரும் திருச்சி மாவட்ட தலைமை பொறுப்பாளருமான பாப்ஜகான் திருச்சி மாவட்ட பொருளாளர் பீமாநகர் சாகுல் மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது தாஹா கம்பரசம்பேட்டை காஜா மைதீன் பழனிபாபா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்கே காஜா மைதீன் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தென்னூர் கலீல் ரகுமான் திருச்சி மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ். பிர் திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா மன்னச்சநல்லூர் தொகுதி செயலாளர் பெஸ்ட் ஃபாரூக் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் பழனி பாபா பேரவையின் மாவட்ட துணை செயலாளர் ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக் திருச்சி கிழக்கு தொகுதி துணை செயலாளர் முபாரக் அலி மாணவரணி செயலாளர் அஜீஸ் திருச்சி மாவட்ட பேச்சாளர் பாலக்கரை ஜாகீர் ஷெரீப் சலீம் ராஜா செபாஸ்டின் முத்துக்குமார் சிப்ஸ் சாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர்  கே எம் சரிப் அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்களின்  ஏற்பாட்டில் ரசிதா ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் முகமது அன்சாரி ராஜா அவர்களின் தலைமையில் மாரி.சூர்யா .மனோஜ் இஷாக் இர்பபான் சரிப் ஆகியோரும். பர்மா பஜார் இப்ராம்சா அவர்களின் தலைமையில் முகமது முபின் மன்சூர் அலி ஆகியோரும் பர்மா பஜார் அவர்களின் தலைமையில் ஜாக் அபு.தமீம் பாபு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.



இறுதியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமஜக தலைவர் கே.எம் ஷெரிஃப் அவர்களும் நிர்வாகிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர்.



வருகின்ற 29 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு சுவரொட்டி பிரச்சாரம் துண்டறிக்கை பிரச்சாரம் ஆட்டோ பிரச்சாரம் தெருமுனை பிரச்சாரம் ஒரு லிட்டர் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு பெருமளவில் ஆட்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments