BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தேசிய கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட நான்கு அலகுகளும் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்வினை மிகச் சிறப்பாக நடத்தினர்.




கல்லூரி வளாகத்தில் தொடங்கி பொன் நகர் வரை விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.



கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் கி குமார் அவர்கள் தலைமை உரை நல்கினார். கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் திரு சிவகுமார் அவர்கள் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு கலந்துள்ளது குறித்தும், போதைப் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் போது தான் சமூக வளர்ச்சிக்கான கதவு திறக்கப்படுகிறது என்றும் சிறப்புரை கன்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மோகன் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்து போதைப் பொருட்களின் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சௌரியார் துரைசாமி முனைவர் கருத்தான் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments