BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது..



இந்த விழாவிற்கு DYFI பாலக்கரை பகுதி குழு கார்த்திக் தலைமை வகித்தார்   DYFI பாலக்கரை பகுதி செயலாளர் சோலை ராஜன் வரவேற்புரை ஆற்றினார். 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ரத்த தான முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.. 





இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மண்டலம் - 3 கோட்ட தலைவர் மதிவாணன் DYFI முன்னாள் மாநில துணை செயலாளர் வெற்றி செல்வம் வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் அலெக்ஸ் அடைக்கலராஜா  , 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மண்டி சேகர் ஆகியோர் கலந்து கொண்டு ரத்த தான முகாமை சிறப்பித்தனர்


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments