BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

 திருச்சி பாலக்கரையில்  தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட, நகர, பகுதி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர்  அ.பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில்  தமுமுக மாவட்ட செயலாளார் S. இப்ராஹிம்ஷா , மமக மாவட்ட செயலாளார் A. இப்ராகிம் மாவட்ட பெருளாளர் N.ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அமைச்சரைவயில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற ஜூலை 9 (ஞாயிற்றுகிழமை)  அன்று கோவை மத்திய சிறைசாலை முற்றுகை போராட்டம்  தமுமுக தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேரா M.H. ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அது சமயம் திருச்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments