BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** IRCTC சிறப்பு விமான சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது

IRCTC சிறப்பு விமான சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது

 திருச்சி: 

இந்திய ரயில்வே சுற்றுலா   பிரிவின் IRCTC - யானது சிறப்பு ரயில், கல்வி சுற்றுலா, விமான பயணத் திட்டத்தை வகுத்து, இந்தியா முழுவதும் அருமையான சுற்றுலாக்களை அறிமுகப்படுத்தி ,ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது . இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதில் 1- காசி கயா சிறப்பு யாத்திரை, ( காசி, கயா,அலகாபாத் மற்றும் அயோத்தியா) - 7 நாட்கள் சுற்றுலா சேவை , தனி நபர் ஒருவருக்கு ரூபாய், 40,500 ஆகும். இதேபோல்  2- சார்தாம் யாத்திரை - ( கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி,ரிஷிகேஷ், மற்றும் ஹரித்வாரி) - 13 நாட்கள் சுற்றுலா சேவை தனிபர் ஒருவருக்கு ரூபாய் 68,150.  என இரண்டு சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 



இந்த சுற்றுலாவில் உள்ளடக்கியவை : 


இந்த சேவையில்  விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து,  தங்கும் விடுதி ,உணவு, சுற்றுலா மேலாளர்,  பயண காப்பீடு, ஜி .எஸ். டி ஆகவை  உள்ளடக்கியுள்ளது சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள IRCTC முழுமையாக ஒத்துழைக்கும். 


1- காசி கயா சிறப்பு யாத்திரை: 


அடுத்த மாதம் 11.08.2023 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டு 17.08.2023 ஆம் தேதி மீண்டும் திருச்சியை வந்தடைகிறது. 


Day 1-  திருச்சி - அயோத்தியா சென்றடைந்துடன் இரவு தங்குதல்,

Day 2- அயோத்தியாவில் உள்ள கோவில் மற்றும் ஆன்மிக சுற்றுலா தளங்களை பார்த்துவிட்டு இரவு  அலகாபாத்தில் தங்குதல். 




Day 3-  அலகாபாத் இருந்து வாரணாசி செல்லும் வழியில் உள்ள சுற்றுலா தலங்கள் பார்வையிட்ட பிறகு இரவு வாரணாசியில் தங்குதல், 


Day 4- வாரணாசியில் உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களை பார்வையிட்ட பிறகு இரவு மீண்டும் வாரணாசியில் தங்குதல்.


Day 5- வாரணாசி வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா சென்று, இரவு தங்குதல். 


Day 6- கயா பகுதியில் உள்ள ஆன்மீக தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு மீண்டும் கயாவில்  தங்குதல்.


Day 7 - கயாவில் இருந்து புறப்பட்டு பாட்னா விமான நிலையம் சென்று அங்கு இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைதல். 


இந்த 7  நாள் சுற்றுலாவிற்கு தனி நபருக்கு 49,500 ரூபாய், இரண்டு பேர் என்றால் 81,000 ரூபாய், மூன்று பேர் என்றால் 1,15800 ரூபாய் என பயண தொகையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது‌‌.




மேலும் இதே போன்று 13 நாள் காண சுற்றுலா 27- 10- 2023 அன்று திருச்சியில் இருந்து புறப்பட்டு  8-11-2023 அன்று மீண்டும் திருச்சி வந்தடைகிறது . இதில் தனி நபருக்கு 80,900 ரூபாய் ஆகும்.  இந்த சுற்றுலா அனைத்தும் covid-19 விதிகள் உட்பட்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி செயல்படுத்தப்படும் என இந்திய ரயில்வே சுற்றுலா   பிரிவின் IRCTC - யானது தெரிவித்துள்ளது. 


மேலும் விபரங்களுக்கு தொடர்பு  எண்கள் :


திருச்சி _ 8287932070


மதுரை - 8287931977, 8287932122


சென்னை - 9003140682, 9003140680, 8287931964

இணையதளம் முகவரி - www.irctctourism.com , தொடர்ப்பு கொள்ளவும் என IRCTC தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments