BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டிடிவி தினகரன் பங்கேற்பு

திருச்சியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டிடிவி தினகரன் பங்கேற்பு

 திருச்சியில் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிா்வாகிகள் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...

இந்த கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரை ஆற்றினார்..


இதில் பங்கேற்ற அமமுக நிறுவன தலைவர் டிடிவி தினகரன்  பேசியதாவது:-

 தமிழகம் முழுவதும் இந்த இயக்கத்தை வழிநடத்துவது தொண்டா்கள் தான். திமுகவை விட மோசமான தீயசக்தி எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்யும் கும்பல் தான் பழனிசாமியுடன் உள்ளது.




கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி இறைத்து நமது நிா்வாகிகளை விலைபேசி அவா்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனா். நம்மைவிட்டு போனவா்கள் எப்படி இருக்கிறாா்கள் என்பது தெரியும். அமமுகவில் 23 அணிகள் உள்ளன. அனைத்து அணிகளிலும் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.


விரைவில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தொடங்கும். திமுக, பாஜக மீதுள்ள பயத்தால் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் காங்கிரஸ் கட்சியுடன் நாம் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. மற்றொரு வாய்ப்பு பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என்று நினைத்து பாஜவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பும் உள்ளது.

அல்லது தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். இது தோதலுக்கான கூட்டணியே தவிர கொள்கைக்கான கூட்டணி அல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை இருந்தால் நாட்டில் ஒரே கட்சி தானே இருக்க முடியும் என்றாா் டிடிவி.




இக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளா் ரங்கசாமி, தலைமை நிலைய செயலாளா் ம.ராஜசேகரன், அமைப்புச் செயலாளா் சாருபாலா, திருச்சி மாநகா் மாவட்ட செயலாளா் செந்தில்நாதன், தெற்கு மாவட்ட செயலாளா் கலைச்செல்வன், பகுதி செயலாளர் சங்கர் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Post a Comment

0 Comments