NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும் - இந்திய குடியரசு கட்சி கோரிக்கை

ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும் - இந்திய குடியரசு கட்சி கோரிக்கை

இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி இன்று திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கார்கில் போரில் உயிர் நீத்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் தேசியக் கொடியுடன் பேரணியாக சென்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.


 தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் 







ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் மருத்துவமனை கட்டித் தர வேண்டும், ராணுவ வீரர்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும், ராணுவ வீரர் உயிர் நீத்தால் அவர்களது குடும்பத்திற்கு உரிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மத்திய,  மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments