கோவையில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகத்தின் கொளரவ தலைவருமான மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்கள் சிறப்பாக சட்டத்துறையில் வழக்கறிஞராக நீதிபதியாக தலைமை நீதிபதியாக கடந்த 50 ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து வருவதற்க்காக அவரது சட்ட பணிகளை போற்றும் விதத்தில் அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது..
நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்கள் தேவகோட்டையில் பிறந்தவர் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார் அது அவருக்கு மன உளைச்சல் தந்த காரணத்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார் அப்போது அவருக்கு சத்திய சோதனை புத்தகம் கிடைத்தது அதை படித்த அவர் தனது முடிவை மாற்றி கொண்டு பள்ளி படிப்பை தொடர்ந்தார்..
தனது விடா முயற்ச்சி மற்றும் கடின உழைப்பால் பள்ளி கல்வி மற்றும் கல்லூரி சட்ட படிப்பை படித்து முடித்தார் அவருடைய இளமை காலத்தில் நாடகங்களில் நடித்துள்ளார் திரைப்படங்களில் நடிக்க முயற்சிகள் மேற்கொண்டார் அப்போது முதல்வராக இருந்த எம். ஜி. ஆர் அவர்களின் நட்பு கிடைத்தது அப்போது தனது நடிப்பு ஆசையை அவர் தெரிவித்தார்..
இவ்விழாவில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயற்ச்சியாளருமான சுரேஷ் பாபு இணை செயலரும் தேசிய குத்துச்சண்டை விளையாட்டு வீரருமான எழில் மணி வழக்கறிஞர் ஆறுமுகம் மகளிர் பிரிவு செயலர் வழக்கறிஞர் கார்த்திகா இணைசெயலர்அல்லி கொடி அஸ்வின் ஜோன்ஸ் மற்றும் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் கந்தசாமி அசோக் குமார் படத்தின் கதாநாயகி வெண்மதி நடிகைகள் மீனா வீரலெட்சுமி திவ்யா இசையமைப்பாளர் பாலகுமார் ஒளிப்பதிவாளர் யாசின் இயக்குனர் குமார் தங்கவேல் அசோசியட் டைரக்டரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்பட குழுவினருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது சமீபத்தில் மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்களின் 50 ஆண்டு காலமாக சிறப்பாக சட்ட துறையில் பணிகளை செய்து வருவதர்க்காக பாரத் விருச்சுவல் யூனிவர்சிட்டி சார்பில் அவருக்கு கொளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் சமீபத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் Dr. K. G. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்களின் சட்ட பணியை பாராட்டி இந்த 2023 ம் ஆண்டிர்க்காண தேசிய சட்ட தின விருதினை வழங்கி சிறப்பித்து வாழ்த்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
0 Comments