BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி

ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஃபைஸ்அகமது தலைமையில் நடைபெற்றது.


 இந்நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் இப்ராம்ஷா, இப்ராஹிம், ஷுமன்கபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 95ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் இருக்கின்ற உரிமைகளை தக்க வைப்பதற்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது.



முஸ்லிம் சமுதாயத்திற்கு 3.5சதவீதம் இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார் இந்த இயக்கத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

எல்லா சமூக மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் சமூக சேவை உருவாக்க வேண்டும் வெறுப்பு அரசியலை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த கட்டத்தில் அன்பையும் கருணையும் பரப்பக்கூடிய வகையில் பல வகை சிறப்பு பணிகளை செய்து வருகிறது.

இன்று தமிழகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு 17லட்சம் மாணவ-  மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது முக்கியமான திட்டமாகும்.


நீட் தேர்வு என்பது மிக மோசமான கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு மருத்துவக் கனவுகளை மண்ணை போட்டுக் கொண்டிருக்கிற மோசமான தேர்வு.

பணம் உள்ளவர்கள் எப்படியாவது படிக்க வைக்க முடியும். ஏழை மாணவர்கள் எவ்வளவு அதிக மார்க் எடுத்தாலும் மருத்துவக் கல்வி படிக்க முடியாது.  இதற்கு தமிழ்நாட்டு ஆளுநர்  முட்டுக்கட்டையாக இருப்பது என்பது கண்டனத்திற்குரியது ஒன்றிய அரசு உடனடியாக தமிழ்நாட்டு விலக்கு அளிப்பது மட்டுமல்ல இந்தியாவிலிருந்து நீட் தேர்வு அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மக்கள் புரட்சியை உண்டாக்கும் வாய்ப்புள்ளது என்பதை  எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன். 

ஆளுனருடைய ஒவ்வொரு போக்குகளும் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக இருக்கிறது. எங்கெல்லாம் பிஜேபி எதிரான கட்சி ஆட்சி நடத்துகிறதோ அங்கெல்லாம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை சீராக நடைபெறுவதை தடுப்பதற்காக ஆளுநரை மத்திய அரசு வைத்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர் எஸ் எஸ் ரவியாக செயல்பட்டு வருகிறார். 


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்திற்கு தலைவராக முன்னாள் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு நியமிக்க கூடாது என திருப்பி அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆளுநர் ஆர்..என் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். 


20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய கைதிகள் சிறையில் உள்ளனர் அவர்களை கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அவர்களை விடுதலை செய்ய எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தற்பொழுது விடுதலை செய்வதற்காக அதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வதற்காக நீதி அரசர் ஆதிநாதன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்ய செயல்பட்டு வருகிறது. எனவே தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாத்தியப்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments