52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுக பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதிமுகவின் 52 -ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா தலைமை தாங்கினார்.
வட்டச் செயலாளர் கயிலை கோபி வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் ராமசாமி, பேரவை இணை செயலாளர் பிரபு, தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். வட்டச் செயலாளர்கள் நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், ராமலிங்கம், கண்ணன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன் , வெல்லமண்டி பெருமாள், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், இலியாஸ்,
முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், என்ஜினியர் இப்ராம்ஷா, தொழிற்சங்கம் ஜெகதீசன், கருடா நல்லேந்திரன், முன்னாள் பகுதி செயலாளர் கலிலுல் ரகுமான், வக்கீல் மலர்விழி, என்ஜினியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ஆடிட்டர் ரவி, என்ஜினியர் கிருஷாந்த், ஸ்பீடு வேல்முருகன், அஸ்வினி மோகன், ரஜினிகாந்த், கே.டி.அன்புரோஸ், வக்கீல்கள் கங்கைச்செல்வன், சுரேஷ், முல்லை சுரேஷ்,சசிகுமார், மணிவண்ணன், ஜெயஸ்ரீ வாழைக்காய் மண்டி சுரேஷ், பொன்னர், பாலக்கரை ரவீந்திரன் , சக்திவேல், சுரேந்தர், வசந்தம் செல்வமணி, ரோஜர், குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், எம்.ஜி.ஆர்.மன்றம் அப்பாக்குட்டி, காசிபாளையம் சுரேஷ்குமார், கல்லுக்குழி முருகன்,
மலைக்கோட்டை ஜெகதீசன், வெல்லமண்டி கன்னியப்பன், ஜான் எட்வர்ட் குமார், திருநாவுக்கரசு, அப்பு சுப்பிரமணியன், ஐ.டி.விங்க் கதிரவன், கமலஹாசன், எடத்தெரு பாபு, மற்றும் வரகனேரி சரவணன், தர்கா காஜா, கே.சி.பி. ஆனந்த்,என்ஜீனியர் சிராஜுதீன், கே.டி.ஏ. ஆனந்தராஜ், தென்னூர் ஷாஜகான், உடையான் பட்டி செல்வம், விஜயகுமார், டைமன் தாமோதரன், நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், ராமலிங்கம், அரப்ஷா, கேபி. ராமநாதன், செல்லப்பன், ஆரி, வாசுதேவன்,சிந்தா மணி கிருஷ்ணன், தென்னூர் ராஜா, பொம்மாசி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன்,உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
0 Comments