திருச்சியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட, மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பில், பகுதி கழகச் செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில், சின்னகடை வீதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பொறியாளர் இப்ராம்ஷா, கவுன்சிலர் அரவிந்தன், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments