NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருச்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

 திருச்சியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில்,  மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.


அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட, மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பில், பகுதி கழகச் செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில், சின்னகடை வீதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
பூத் கமிட்டி  மாவட்ட பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைக்கப்பட்ட நிலை குறித்தும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கையேடு, ஆதார் எண் இணைப்பு, தொடர்பு எண் ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தினார்.





இதில் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பொறியாளர் இப்ராம்ஷா, கவுன்சிலர் அரவிந்தன், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments