BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** எடப்பாடி பழனிச்சாமியுடன் தமஜக தலைவர் செரீப் சந்திப்பு

எடப்பாடி பழனிச்சாமியுடன் தமஜக தலைவர் செரீப் சந்திப்பு

 இன்று சேலத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரீப் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்..

பா.ஜ.க.கூட்டணியில் இருந்து விலகியதற்காக வாழ்த்துக்களும்.... மதுரை மாநாட்டில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக நன்றியும் தெரிவிக்கப்பட்டது...


பாரதிய ஜனதா கட்சியோடு எந்த காலத்திலும் உறவு கிடையாது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் தமஜக தலைவர் கே.எம்.சரிப் அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் அண்ணன் கே.எம்.ஷெரிஃப் அவர்களின் தலைமையில் மாநில துணை பொதுசெயலாளர் சண்முகராஜா திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா சிவகங்கை மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் 

சேலம் மாவட்ட செயலாளர் அப்துல் ரஷீத் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒயிட் பாட்ஷா ஆகியோர் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு வாழ்த்துக்களையும் சிறிது நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மாநாடு மதுரையில் நடைபெற்றதில் அதில் நீண்டகால இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரி தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி கூறியும் இந்த சந்திப்பு நடைபெற்றது..



இந்த சந்திப்பில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் அவர்கள் உடன் இருந்தார்கள்.


இந்த சந்திப்பில் எடப்பாடி 

கே.பழனிச்சாமி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது சிறுபான்மையின ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக அதிமுக எப்போதும் செயல்படும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments