NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பாரத் சாரண சாரணியர் இயக்கத்தின் 74 வது விழா

பாரத் சாரண சாரணியர் இயக்கத்தின் 74 வது விழா

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் 74 வது  பவுண்டேஷன் டே விழாவை முன்னிட்டு நமது பள்ளி சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பாக திருச்சி புத்தூர் அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்றோர் சுமார் 70 நபர்களுக்கு அன்னதானம் சாரண குழந்தைகளின்  கைகளால் கொடுக்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்திக் கொடுத்த பள்ளியின் முதல்வர் உஷா ராகவன் அவர்களும், மணப்பாறை மாவட்ட சாரண சாரணியர் இயக்கத்தின் செயலாளர் திரு. மில்டன் அவர்களும் வருகை தந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தனர். 











இந்த நிகழ்ச்சியில் அமிர்த வித்யாலயம்  பள்ளியின் சாரண சாரணியர் இயக்கத்தின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பின்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல்வர் அவர்களும் மணப்பாறை சாரண இயக்கத்தின் செயலாளர் திரு மில்டன் அவர்களும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார். இந்த புனித நிகழ்வுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments