திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் தடுப்பை பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இந்த விழிப்புணர்வு நிகழ்வை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தினார்கள்..
இந்த நிகழ்வில் ராபின்சன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்..
அதனை தொடர்ந்து பிரீத்தி நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அவர்கள் மார்பக புற்றுநோயிலிருந்து கர்ப்பிணி பெண்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வதை பற்றியும்கர்ப்ப காலத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்ட சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக புரதம் நிறைந்த சத்து அதே போன்று ஹீமோகுளோபின் அதிகரிக்க தேவையான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள அறிவுரை வழங்கினார்..
ஆகவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மற்றும் ஊட்டச்சத்து அனைத்து தாய்மார்களுக்கும் பேரிச்சம் பழம் வழங்கிய சில்ட்ரன் டிரஸ்ட் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்..
சித்ரா பார்மசி சிஸ்டர் ஏற்பாடு செய்த அனைவருக்கும் மற்றும் நமது மருத்துவ அலுவலர் அவர்களுக்கும் திரு ராபின்சன் அவர்களுக்கும் இந்த நிகழ்வில் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள் பயன்பெற்றனர்
0 Comments