ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு "கனவு ஆசிரியர் திட்டம்" தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கனவு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் MCQ (Multiple choice questions) என்கிற முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழகம் முழுவதிலும் உள்ள 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் - தேர்வில் கலந்து கொண்டனர். இதில் தேர்வு பெற்ற 964 ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.
இவர் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் கீழ் இயங்கி வரும் திருச்சி அஸ்ட்ரோ கிளப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து விடுமுறை நாட்களிலும், திருச்சி விழா, திருச்சி புத்தகத் திருவிழா போன்ற நிகழ்வுகளிலும் பள்ளி மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் வானியல் விழிப்புணர்வு நிகழ்வுகளை கொண்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை உமாவின் கணவர் மணிவண்ணபாரதி திருச்சியின் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் என்பது குறிப்பிடதக்கது..
0 Comments