இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கு - பேங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் பேட்டி.
பேங்க் ஆப் இந்தியா மதுரை மண்டலம் சார்பாக பெண்கள் மேம்பாடு திட்டம் குறித்த வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது..
இதில் மதுரை மண்டல மேலாளர் உன்னி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பேங்க் ஆஃப் இந்தியா செயல் இயக்குநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் குழுவினருக்கு ஐந்து கோடிக்கணக்கான காசோலை மற்றும் மகளிர் கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேங்க் ஆஃப் இந்தியா செயல் இயக்குநர் கார்த்திகேயன் பேசுகையில்:
பேங்க் ஆப் இந்தியா 118 வருடமாக தேசிய அளவில் 5132 கிளைகளை கொண்டுள்ளது 2023 - 2024 முதல் காலாண்டில் 1551 கோடி லாபம் பெற்றுள்ளோம் இரண்டாம் காலாண்டில் 1498 கோடி நிகர லாபம் பெற்றுள்ளோம்
தற்பொழுது சென்னை தெற்கு மண்டலத்தில் 75 கோடியும் மதுரை மண்டலத்தில் 25 கோடியும் கடன் வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்
0 Comments