NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமிழக அரசு உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழக அரசு உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

 தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் தலைவர் குமார் தலமைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளர் சிவராமன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் ஆட்சிக்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : புதிய ஓய்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன அதனை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மாதம் பொது கலந்தாய்வு நடைபெற்றது போல 164 கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு பொது இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்

Post a Comment

0 Comments