BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** 2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கவும், இந்தியா கூட்டணியை ஆதரித்து திருச்சியில் நாளை மக்கள் அதிகாரம் சார்பில் பேரணி மாநாடு

2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கவும், இந்தியா கூட்டணியை ஆதரித்து திருச்சியில் நாளை மக்கள் அதிகாரம் சார்பில் பேரணி மாநாடு

 திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது..இந்த  சந்திப்பில் மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜு பேசுகையில்.., வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பிஜேபியை தோற்கடிக்க வேண்டும் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் பேரணி மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சி ஜனவரி 7ஆம் தேதி நாளை  நடைபெற உள்ளது.


இந்த மாநாட்டில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கோபட் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் இளங்கோவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜீவாஹிருள்ளா, சிபிஐ எம் எல் மாநில பொதுச் செயலாளர் ஆசை தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.







இந்த பேரணி மாநாட்டில் மாநில உரிமை பறிப்பு, அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு, வெறுப்பு அரசியல் வன்முறை, கார்ப்பரேட் கொள்ளை உள்ளிட்டவை குறித்தும் பிஜேபியை தோற்கடித்து இந்தியா கூட்டணியை ஆதரிப்பது தொடர்பாக பேசப்படும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments