BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** சாலையை சீரமைக்க கோரி மேயரிடம் மமக சார்பில் மனு

சாலையை சீரமைக்க கோரி மேயரிடம் மமக சார்பில் மனு

திருச்சி பாபு ரோடு மற்றும் EB ரோடு சாலையை இணைக்கும் பாபு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள சாலை பாளதாள சாக்கடை பணிக்காக 2 ஆண்டுகளுக்கு மேலாக தோண்டப்பட்டு சீரமைக்கபடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. 


அதனால் பள்ளி குழந்தைகளும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இங்கு அருகில் மருத்துவனையும் உள்ளது.அங்கு வந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் சிரமமாக உள்ளது.

எனவே சாலையை சீரமைக்க கோரி திருச்சி கிழக்கு மாவட்ட சவுக் கிளை தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் அவர்களை சந்தித்து கோரிக்கை (1.2.24) விடுக்கப்பட்டது

 இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட மமக செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா, மாவட்ட துணை அணி நிர்வாகிகள்  பிர்தோஸ், சம்சுதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் மைதீன், அபுதாஹிர் ஆகியோர் உனிருந்தனர். விரைவில் பாபு ரோடு சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தரப்படும் என மாநகராட்சி மேயர் அவர்கள் உறுதி அளித்தார்.

Post a Comment

0 Comments