திருச்சி கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட தலைவர் முகமது ராஜா முன்னிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்..
தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்யும் NSB ரோடு, பெரிய கடைவீதி, சிங்காரதோப்பு, தெப்பக்குளம், காமராஜர் வளைவு, கல்லூரி சாலை , சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை வியாபாரஸ்தலமாக மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் ..
அறிவிக்க முடியாத பட்சத்தில் யானைகுளம் பகுதியில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் முகமது ராஜா, வர்த்தக சங்க செயலாளர் அன்சர் அலி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் கபீர் அகமது , தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் சையது முஸ்தபா, துணை செயலாளர் சம்சுதீன், வர்த்தக அணி துணை செயலாளர் சிபாயத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்
0 Comments