BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தரைக்கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு மாவட்ட ஆட்சியரை சந்திக்க மனிதநேய வர்த்தக சங்கம் வியாபாரிகளுக்கு அழைப்பு

தரைக்கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு மாவட்ட ஆட்சியரை சந்திக்க மனிதநேய வர்த்தக சங்கம் வியாபாரிகளுக்கு அழைப்பு

 திருச்சி மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தக நலச்சங்கம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கை செய்தி மூலமாக தரைக்கடைகளை அப்புறப்படுத்தப்படும் கூறி வருகின்றனர்.


ஆனால் வியாபாரிகளுக்கு முறையான அடையாள அட்டையோ அல்லது மாற்று இடம் தராமலோ சட்டத்துக்கு புறம்பாக மலைக்கோட்டை  பகுதியில் உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்தப் போவதாக வரும் செய்தியை எண்ணி வியாபாரிகள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர் எனவே வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் வியாபாரிகள் ஆண்டாண்டு காலமாக வியாபாரம் செய்யும் பகுதிகளான என் எஸ் பி ரோடு கடைவீதி பகுதியை வியாபார ஸ்தலமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிற  திங்கட்கிழமை .5.2.2024 அன்று காலை 10 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக பிரிவான மனித நேய அனைத்து வர்த்தக நலச் சங்கத்தின் சார்பாக பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்படும்.. என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments