BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** பாஜக வேட்பாளர் யாரராக இருந்தாலும் வெற்றி பெற வைப்போம் திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் ஆர் ஜி ஆன்ந்த் பேட்டி

பாஜக வேட்பாளர் யாரராக இருந்தாலும் வெற்றி பெற வைப்போம் திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் ஆர் ஜி ஆன்ந்த் பேட்டி

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது என்பதனை இந்த வினாடி வினா நிகழ்ச்சி  உணர்த்தியுள்ளது - திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் ஆர் ஜி ஆனந்த் பேட்டி.


இன்னும் சில நாட்களில் பாராளுமன்ற தேர்தல் வர  உள்ள நிலையில் இந்திய அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு என தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் 40 க்கு 40 இடங்களில் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில்  திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன


திருச்சியில் பல இடங்களில் பாஜக சார்பில் "மோடி 3.0 மீண்டும் மோடி வேண்டும் மோடி " என்ற வாசகம் பொருந்திய சுவர் விளம்பரம் மூலம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்


திருச்சி, கருமண்டபம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழு  பயனாளிகளுடன்  வினாடி வினா போட்டி நடைபெற்றது.பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுமான முன்னாள் குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினருமான ஆர்.ஜி .ஆனந்த்  திருச்சி பாஜக நிர்வாகி ஒண்டி முத்து ஆகியோர்‌  கலந்து கொண்டனர்.அப்போது பாரதப் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன?12 வாரங்களாக இருந்த பெண்கள் மகப்பேறு விடுப்பு எத்தனை நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது? என்பன உள்ளிட்ட அறிவார்ந்த 18 கேள்விகள்  வினாடி வினா நிகழ்ச்சி நிரலில் கேட்கப்பட்டது.


அங்கிருந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு ஆர்வமுடன் பதில் அளித்தனர்.வெற்றி பெற்ற மகளிருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்வின் இறுதி கட்டத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆர்.ஜி ஆனந்த்...மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது என்பதனை இந்த வினாடி வினா நிகழ்ச்சி  உணர்த்தியுள்ளது

இதில் பங்கேற்ற பெண்கள் ஏறத்தாழ அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்ததே இதற்குச் சான்றாக உள்ளது.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாம் முறையாக மீண்டும் மோடியை பிரதமர் ஆக்குவதே எங்களது லட்சியம்.

 தலைமை வாய்ப்பளித்தால் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யாரராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்வோம் என தெரிவித்தார்

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments