ரம்ஜான் நோன்பு துவங்குவதால் இரவு நேர உணவகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத் துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்குவதால் இஸ்லாமியர்கள் பகல் நேரங்களில் (விரதம்) நோன்பு நோற்றும் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடுவதும் வழக்கம்.
எனவே திருச்சி மாவட்டத்தில் இந்த ஒரு மாதம் காலம் இயங்கும் இரவு நேர உணவகம் மற்றும் தேநீர் கடைக ளுக்கு உரிய ஒத்துழைப்பும் அனுமதியும் அளிக்க வேண்டும். இவ்வாறு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் தனது அறிக்கை தெரிவித்துள்ளார்..
0 Comments