திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியின் (தன்னாட்சி) வணிகவியல் துறையால் மார்ச் "நிறுவன வெற்றிக்கான நிறுவன வள திட்டமிடலை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விரிவுரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. கல்லூரிப் பாடல் மற்றும் 'தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் எம்.சர்மிளா, வணிகவியல் கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விழாவில் முதுகலை வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவர்களான திரு. ஹரிராம் மற்றும் கிருஷ்ண பிரசாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினரை கவுரவித்தனர்.
முதுகலை வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி செல்வி, யோகிதா கல்லூரியின் சார்பில் சிறப்பு விருந்தினருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்தநிகழ்வானது தேசிய கீதத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
முதுகலை வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவிகளான பிரியதர்ஷினி மற்றும் சுஜிதா ஆகியோர் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிபேராசிரியர் முனைவர் செ.கணபதி செய்திருந்தார்.
இந்த சிறப்பு கூட்டமானது நிறுவன வளத் திட்டமிடலை நிறுவன வெற்றிக்காக மேம்படுத்துவதுகுறித்து, மாணவர்களுக்குஅறிந்து கொள்ளும் வாய்பாக இருந்தது.
நிருபர் ரூபன்
0 Comments