NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

திருச்சியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் திருச்சி மாவட்டம் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்றது.

திருச்சி  மாவட்ட தலைவர் பசூல் ரகுமான் முன்னிலையில், மாநில பொருளாளர் மன்சூர் தலைமையில் ,மாநில துணைத்தலைவர் அல்தாபி அவர்கள் சிறப்பு தொழுகையை நடத்தினார். 

கடந்த சில வாரங்களாக திருச்சியில் கடுமையான வெப்பத்தின்  தாக்கத்தினால், வறட்சியில் மக்கள் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கக் கூடிய சூழலில்,கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாகவும் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வதற்காகவும் , இறைவனிடத்தில் மழையை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது..




இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் பங்கேற்றனர்.

நிருபர் முஜிப்

Post a Comment

0 Comments