// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** கேரளா வயநாட்டில் நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

கேரளா வயநாட்டில் நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

கேரளா மாநிலம் வயநாட்டில் நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக் அறிக்கை வெளியிட்டுள்ளார்..


அதில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை 25 ஆம் தேதி சனிக்கிழமை கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற இருப்பதால் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதால் அனைத்து உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் , உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழ் கொண்டு வர வேண்டும் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கேட்டு கொண்டுள்ளார்

Post a Comment

0 Comments