நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்த திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு பெடரேஷன் சார்பில் சர்வதேச இளைஞர் விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளம், பொக்காரா ஸ்டேடியத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென கபடி, பேட்மிட்டன், கிரிக்கெட், யோகா, டேக்வாண்டோ, கராத்தே, பாக்சிங், குத்துச்சண்டை, சிலம்பம், சதுரங்கம், கால்பந்து, கைப்பந்து, துப்பாக்கி சுடுதல் மற்றும் வாள்வீச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்ததாக துபாயில் நடைபெறும் ஆசிய போட்டிக்கு மூன்று மாணவர்களும் தேர்வாகியுள்ளனர் என்பதும், ஆசிய போட்டிகளிலும் பதக்கங்கள் வென்று நிச்சயம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடித் தருவோம் என மாணவர்கள் உறுதிப்பட தெரிவித்தனர்.
0 Comments